Friday, October 10, 2025

கிராமம் நகரம் மாநகரம் மாபெரும் நகரம்: யாதும் ஊரே

கிராமங்களில் பிறந்து நகரங்களில் குடியிருப்போர் பலரும் கிராமங்கள் கடவுளின் மிச்சங்கள் போலவும் நகரங்கள் மனிதம் தீய்ந்துபோன அல்லது தேய்ந்துபோன எச்சங்கள் போலவும் சித்தரிக்கின்றனர். நா முத்துக்குமாரின்  "கிராமம் நகரம் மாநகரம்" புத்தகமும் அப்படி ஒரு மயக்கத்தை முதலில் தந்தது. ஆனால், கிராமத்தில் பிறந்து, நகரங்களில் குடியிருந்த என் அனுபவத்தோடு பொருந்தினாலும், பின் மீண்டும் கிராமத்திற்குப் புலம் பெயர்ந்த அனுபவங்களோடு அவை பொருந்தவில்லை. யோசித்து யோசித்து பார்த்தபோது, கசப்பைத் தேய்ப்பதில், அப்பாவியான(க) வெள்ளையில் கருப்பின் பல சாயல்(ங்)களைக் காட்டுவதில் கிராமங்கள் நகரத்துக்கு ஒப்பானவை அல்லது நகரத்தை மிஞ்சியவை என்ற காட்டமான சிந்தனையும் உள்ளோடிற்று... 

கடையம் என்னும் சிற்றூரில் பிறந்து கோவை என்னும் நகரத்தில் படித்து சென்னை மற்றும் டெல்லி மாநகரங்களில் பல வருடங்களும், பெங்களூரு, டெட்ராய்ட் மாநகரங்களிலும் மற்றும் நியூயார்க் மாபெரும் நகரத்திலும் பல மாதங்களும் வாழ்ந்த காலங்களை மூளை மீளொளிபரப்பியது. கிராமமும் நகரமும் அன்பைக் கொட்டிக் கொடுத்த நினைவுகளும் கொடுக்குகளோடு நின்ற நினைவுகளும் அணிவகுத்து நின்றன. என் வாழ்வின் அழகியல் நிகழ்வுகளும் துன்பியல் நிகழ்வுகளும் பாரபட்சம் இல்லாமல் எல்லா ஊர்களிலும், ஏன், எல்லா நாடுகளிலும் நடந்திருக்கின்றன. முத்துக்குமார் மேற்கோள் காட்டும் சத்திமுற்றப் புலவர் மதுரையில் நின்றதுபோல் நான் நின்ற இடம் நகரமோ மாநகரமோ மாபெரும் நகரமோ இல்லை, என் சிற்றூரிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள இன்னொரு சிற்றூரில்தான். அப்படியானால், ஏன் பெரும்பாலானோர் கிராமங்களை இனிமையானதாகவும், நகரங்களை திகிலுடனும் பார்க்கிறார்கள், சித்தரிக்கிறார்கள்? இந்த கேள்விக்கான விடையை ஒரு கோணத்தில் மட்டும் பார்க்க இயலாதென்றே தோன்றுகிறது. [ஒற்றைக் கோணம் / single point of view என்பது குறித்து ஒரு கட்டுரை மிக அவசியம் என்று உணர்கிறேன்]

பழைய நினைவுகள் பொதுவாக இதம் தருபவை. அதுவும் பள்ளிப்பருவத்தை நினைத்துப் பார்ப்பது இதம் மட்டுமல்ல மயக்கம் தருவது. பனங்காயின் வண்டியில் பம்பாய்க்கு போனதை நினைப்பது ஒரு போதையாய்ப் போகிறது!!! நம்மில் பெரும்பாலோர்க்கு மாணவப்பருவத்தில் கவலைகளென்று  பெரிதாக ஏதுமில்லை, படிக்கவேண்டியது தவிர வேறு பாரங்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால், எல்லோருமே (சிரமமான பள்ளிப்பருவம் கொண்டவர்கள் உட்பட) அந்த காலகட்டத்தில் இருந்த பாரங்களைவிட பல மடங்கு பின்னாளில் சுமக்கிறோம் / சுமப்பதாக நினைக்கிறோம். அதுமட்டுமல்ல, காதல் பார்ப்பது பாதி கண்ணில் கல்யாணம் பார்ப்பது நான்கு கண்ணிலடி என்ற சினிமா பாடல் சொல்வதுபோல போல, பாதி கண்ணில் பார்ப்பது காதல் மட்டுமல்ல பால்யமும் தான்... பால்யத்தைத் தொலைத்த பின்  நான்கு கண்ணில் பார்ப்பது நமக்கு பழகிப்போகிறது... அதற்குப் பிறகு, கிராமத்தில் வாழ்ந்தாலும் நகரத்தில் வாழ்ந்தாலும் ஒன்றுதான்!!  குறை காணத் தெரியாத தேவகு(க)ணத்தில்,  கண்ட காட்சியையும், குறைமட்டுமே தெரிகின்ற வாழ்க்கையையும்  ஒப்பிட்டால் எது வெல்லும்!! 

பனங்காய்க்குப் பதிலாக பழைய டயரில் பம்பாய்க்கு போனதும் போதைதானே... ஆனால் ஏன் பனங்காய்க்கு மட்டும் இத்தனை மவுசு...  நகரங்களில் வேறு விளையாட்டுகள் விளையாடித் திரிந்த சிறார்கள் எங்கே!! அவர்களின் தவிப்புகள் என்ன... அவை குறித்து பெரிய பதிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. நகரத்துக்கு வந்த பின், கவிபாடும் கிராமத்துத் தமிழ்ப் பேனாக்களின்  எண்ணிக்கையும் சதவீதமும் நகரத்து பேனாக்களைவிட அதிகம் என்பதாலும், நகரத்துப் பேனாக்கள் ஆங்கிலத்தில் அல்லது வேறு பிற மொழிகளில் மயங்குவதாலும் இருக்கலாம்! அல்லது நகரை விட்டு மாநகரத்துக்கோ, மாபெரும் நகருக்கோ புலம் பெயர்ந்து, தாம் விளையாடிய விளையாட்டுகளை முத்துக்குமார்களின் பழனி பாரதிகளின் வரிகளில் பொருத்திப் பார்த்து திருப்தி ஆகிவிடுகிறார்களோ என்னவோ!!! 

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வாசம், ஒவ்வொரு நினைவு... ஆனால் ஊர் என்பது நிலமோ, அதன் நதியோ, கட்டடங்களோ, கட்டமைப்போ மட்டும்தானா, அங்குள்ள மனிதர்கள், நிகழ்வுகள், அவை தரும் நினைவுகளும்தானே!!  மண் வாசனை வந்தால் எந்த ஊரிலிருந்தாலும் கடையத்தில் இருப்பதாகத்தான் உணர்கிறேன். ஹமாம் சோப்  யாருக்காவது மருத்துவமனையை உணர்த்துமா?!?! எனக்கு வரும்!!  வாசனைக்கு அப்படி ஒரு  சக்தி.  ஒருமுறையேனும் நாம் கடந்த ஊர்கள், இடங்கள், கடந்த நினைவுகளை, கடக்க நினைக்கும் நினைவுகளைக் கிளறும். எந்த ஊரில் எந்த நினைவு எப்போது எழும், என்ன விதமான விளைவுகளைத் தரும் என்பதை யார் உரைக்கக் கூடும்! இனிமையான உணர்வுகளோடு, இனிமையை மட்டுமே உணரும் திறத்தோடு வாழ்ந்த இடத்தின் வாசம் இனிமை தருவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான். அவற்றைத் தாண்டி நடுவு நிலையில் நிற்றல் எப்போது வரும்? 

யாதும் ஊரே என்று சொன்னவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? "கல் பொருதுமிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம்" என்ற (ஆற்றில் மிதக்கும் தெப்பம்போல வாழ்வு செல்லும் என்று உணர்ந்த) ஆழ்ந்த அமைதி மனதுள் இருந்தால் அனைத்தையும் இயல்பாக ஏற்க முடியுமோ!! தெப்பத்திற்கு ஒரு எதிர்பார்ப்பும் இல்லை, இன்றைய சூ(சு)ழலை நேற்றைய நிலையுடன் நேர் நிறுத்தி எந்த ஒப்பீடும் இல்லை. இந்த நிமிடம் மட்டுமே உண்மை என்று வாழும்போது இத்தகைய மயக்கங்கள் இல்லையோ!!

எல்லா ஊர்களும் விருந்தாளியாக வரும் போது ஒரு முகமும் வாழ வரும்போது ஒரு முகமும் காட்டுகின்றன. நமக்கும், ஊர் சுற்ற செல்லும் போது இருக்கும்  மனநிலையும் புலம்பெயரும் போது இருக்கும்  மனநிலையும் வேறு வேறு தானே!! (புலம் பெயர்தல் என்பது குறித்த தனித்த கட்டுரை எழுதலாம்தான், 7 வருடத்தில் 8 முறை புலம்பெயர்ந்த அனுபவமும், வெவ்வேறு காரணங்களால் புலம் பெயர்ந்தாரோடு நெருங்கிப் பழகி உணர்ந்தவற்றையும் கொண்டு... புலம் பெயர்தல் எப்போதும் பரவசம் அளிப்பதாயில்லை. சிலசமயங்களில் பயமளிப்பதாகவும்,  நெஞ்சைப் பிளப்பதாகவும் கூட இருக்கிறது, தெரிந்த ஊருக்கே என்றாலும்...) ஒரு பயணியாகவே எல்லா இடங்களையும் நேரங்களையும் கடந்தால், வாழ்வு இலகுவாக இறகு போல் இருக்கும் என்று முற்றும் உணர்ந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் பயணியாகவே/ விருந்தாளியாகவே இருக்கும் தன்மையை  நிர்ணயிப்பது நம் மனநிலை மட்டுமில்லை... அந்த ஊருக்கு நமது பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும், விதிகளும் கூடத்தான்... உள்ளூர்க்காரர் போன்ற பங்களிப்பும் விருந்தாளி போன்ற மனநிலையும் ஒருங்கே பெற்றவர்கள் பாக்கியவான்கள். 

ரூமி இன்னும் அழகாக "Wherever you stand, be the soul of that place" என்கிறார். நீ எங்கிருந்தாலும் அந்த இடத்தின் ஆன்மாவாக இரு என்கிறார். அன்பின் வழி நிற்கும் உயர்நிலை இல்லாமல் அது கைகூடுமோ!! வேறுவிதமான வாழ்வியலை, சாட்சியாக மட்டும் பார்த்திருந்து, ஒப்பீடுகள் இல்லாமல், வாஞ்சையோடு இருப்பதற்கு எப்பேர்ப்பட்ட நுண்ணறிவும் அன்பும்  வேண்டும். கல்வியின் பயனாய் வள்ளுவர் கூறுவது இதைத்தானே!! என் இனம், என் இடம் என்று குறுகாமல் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று விரிவதற்கு உதவாவிடில் கல்வியால் என்ன பயன்... அறிவால் என்ன பயன்...

சட்டென்று யாதானும் நாடாமால் ஊராமால் என்ற குறள் வேறொரு பொருள் தந்தது!! இத்தனை நாளும் கற்றோரை எல்லா நாடும் எல்லா ஊரும் ஏற்றுக்கொள்ளும் என்று நினைத்திருந்தேன்!! அறிவு விசாலமாக ஆக, எல்லா ஊரையும் நாட்டையும் தன் இடம் போல் நினைக்கும் தெளிவையும் அன்பையும் தரும் என்று இப்போது புரிகிறது. இப்படிப்பட்ட அறிவைத் தரும் கல்வியை, சாகும் வரை கல்லாதிருப்பது ஏன் என்ற வள்ளுவரின் விசனம் நியாயமானதுதானே... நல்லவேளை சாவதற்கு முன் புரிந்ததே!! இந்த ஜென்மம் கடைத்தேறிற்று!! 


பிற்குறிப்பு: இவையெல்லாம் "கிராமம் நகரம் மாநகரம்" என்ற நா முத்துக்குமாரின் அருமையான படைப்பை படித்து, முதலில் கிறங்கி, பின்பு திடீரென  விழித்துக் கொண்டதன் விளைவுகள். அவர் மட்டும் பாதியில் விடைபெற்றுப் போகாவிடில், தமிழ் இன்னும் அதிகமான சொல்லாடல்களைக் கண்டிருக்கும்!! வாழ்வின் நுட்பங்களை உணர்த்தும் வல்லமை மிகுத்திருக்கும்!! கண்ணாடிக்குளம் என்ற ஒரு வார்த்தை இன்னும் பலகாலம் தன்னுள் என்னை ஏந்தி நீஞ்சும்... நீளும்.... அந்த வார்த்தையைப் படித்தபோது "கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்" மனதுள் வந்து போனது... கம்பன் என்ற சொல்லை முத்துக்குமரன் என்ற சொல்லால் இட்டு நிரப்பி அந்தப் பாடலைப் பாட முடியும்தானே! யாரையும் நகலெடுக்காமல், ஆனால் நான்கு அத்தியாத்திற்குள் நானுறு கவியரசர்களை  நினைவில் நிறுத்துவது ஒன்றும் சாதாரண செயல் அல்ல!!! இன்னும் சில காலம் வாழ்ந்து தமிழை, தமிழ்க் கவிப்பேரரசர்களை வாழ்வித்திருக்கலாம்! என்ன செய்ய... குறுகத் தரித்த குறள்...

Friday, November 8, 2024

அப்பாக்களுக்கு மட்டும்...

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் என்ற வரிகளுடன் நா முத்துக்குமார் எழுதிய பாடலொன்று மிகவும் பிரபலமானது. என்னைப் பொறுத்தவரை மகள்களைப் பெற்ற அப்பாக்கள் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்...

மனைவியும், பிற பெண்களும் கூட யாருக்கோ மகள்தான் என்ற நினைப்பே இல்லாமல், அவர்களை, சின்னதும் பெரியதுமாய் அவமதித்த / அவமதிக்கின்ற / வருத்துகின்ற புரிதல் கூட இல்லாமல், தன் மகள் மட்டும் ஒரு ராஜகுமாரி என்று நம்பும், தன் மகளை அவள் கணவனோ, பிற ஆண்களோ நிந்திக்கும் போதும், மகள் சமூகத்தின் அவலங்களில் அல்லாடும்போதும் அங்கலாய்க்கும் தந்தைமார்கள், ஆச்சர்யமானவர்கள்தானே!!!  ஒருவேளை பார்வை குறைபாடோ என்று நாம் இரங்கும் அளவுக்கு ஆச்சரியம்தான்...  

பெண்கள் நைட்டி போடலாமா கூடாதா என்ற விவாதம் நடந்த வீடுகளில்தான், மகள்கள் அரைக்கால் சட்டை (லெக்கின்ஸாகவும் இருக்கலாம்) அணிகிறார்கள் என்ற, யாரோ எழுதிய வரி அவ்வப்போது நினைவிலாடத் தவறுவதில்லை...  இதில் எந்த உடை சரி தவறு என்பதல்ல கேள்வி; அவரவர் உடை அவரவர் வசதிப்படி!!! ஆனால், தனக்கொரு வழி பிறருக்கு வழி என்று நினைப்பது பொதுவாக மனித இயல்பா அல்லது ஆண்களின் பிறப்புரிமையா என்பதுதான் கேள்வி!!! ஒருவேளை தன் அனுமதியின் பேரில் நடப்பதாக நிறைவடைகிறார்களோ என்னவோ!!! 

அந்த தந்தைகளுக்குப் புரிகிறதோ இல்லையோ, காலம் மட்டும் தன் கணக்கைத் தவறவிடுவதேயில்லை!! எப்படியாவது புரியவைக்க முயன்று கொண்டே இருக்கிறது.  ஆனாலும்  என்னவோ, அவர்களுக்கு, தாம் தம் மனையாளுக்கும், பிற பெண்களுக்கும் இழைத்த குற்றங்கள் புரிந்தபாடாயில்லை.... புரிந்தாலும், சரியானதைச் செயலாக்கத் தெரியவில்லை... புரிதலுக்கும் செயலாக்கத்துக்கும் இருக்கும் இடைவெளி எல்லை நீத்த பெருவெளி.... 

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். மகள்களைப் பெற்ற தந்தைமார் பாக்கியவான்கள்!! பாடமாவது கிடைக்கிறது - புரிவதும் புரியாததும் அவரவர் ஞானத்தையும் பூர்வ புண்ணியத்தையும் பொறுத்தது ;-)  ;-)  மற்றவர்களைப் பெற்ற தகப்பன்களுக்குப் புரிய வைப்பார் யாரோ!! எதுவோ!! புரியவேயில்லை என்றால் செயல் எப்போது / எப்படி மாறும்!! 

மாறாது என்று விட்டுவிடக் கூடிய விஷயம்தானா இது! விட்டுவிடலாம்தான்!! நமக்கென்ன பாதி கிணறு தாண்டியாயிற்று; மீதி காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் நிழல் கூடப் படாமல் வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம்தான்.... ஆனால், அப்படியே விட்டுவிடுவது ஒரு எஸ்கேப்பிசம். உலகத்தின் மொத்த வறுமையையும் இட்டு நிரப்ப முடியாமல் போகலாம் ஆனால், பசித்த ஒருவருக்கு உணவிட முடியும் அல்லவா!! அதுபோலத்தான், எல்லா அப்பாக்களையும் (அப்பாவாக இன்னும் மாறாதவர்களையும்) மாற்ற முடியாமல் போகலாம். ஆனால், ஓரிருவர் மாறினாலும் உலகம் கொஞ்சம் சுத்தமாகும், கொஞ்சம் ஒளியேறும், கொஞ்சம் சிறக்கும் என்ற பேராசை எனக்கு.  

கார்ப்பரேட் நிறுவனங்கள், சக மனிதர்களை சமமாக நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.  ஓரளவுக்கு வெற்றியும் கண்டுள்ளன. சரியானபடி நடந்து கொள்ளாவிடில் வேலை போய்விடும் என்ற பயமும் ஒரு காரணம் என்றாலும், புரிதலும் முக்கிய காரணம். எனவே, வளையக்கூடிய ஐந்து வயது சிறுவர் சிறுமிகளுக்கும், தேடலோடு இருக்கும் பதின்ம வயதினருக்கும், மாறும் திறன் இன்னும் மரித்துப் போகாத மனிதர்களுக்கும், சக மனிதர்களை மரியாதையுடன், அன்புடன், மனித நேயத்துடன்,  நடத்த பாலினமோ, மொழியோ, நாடோ, தோலின் வண்ணமோ, இன்ன பிற வேறுபாடுகளோ தடையல்ல என்று சொல்லித் தரவேண்டியது, இந்த காலகட்டத்தின் அத்தியாவசியத் தேவை. இந்தக் கல்வி, ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும், (மகனையோ மகளையோ பெற்ற) பெற்றோர்களுக்கும் தேவை; அப்பாக்கள் மாற அனைவரும் படிக்கவேண்டியிருக்கிறது.

நம்முடைய அடுத்த அறப்பணி இந்த நோக்கத்தை நோக்கி நகரும்!!! ஆற்றலும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் தெரிவியுங்கள்.

பிற்குறிப்புகள் : 

  1. நண்பர்கள் என்பது பொதுவான சொல். பாலினம் சார்ந்ததல்ல.
  2. தன் எண்ணத்தை, செயலை, மாற்றிக் கொள்ள இயலாதவர்கள் மட்டுமே, புதிதாகக் கற்றுக் கொள்ள இயலாதவர்கள் மட்டுமே மு(த்)தியவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!!!  அப்படி, வளைய முடியா வயதில் இருப்பவர்களை, தண்டிப்பது அல்லது தவிர்ப்பது மூலம் மாற்ற வேண்டியதுதான்.--- உதவுவது போல அண்ணன் தம்பி உதவுவதில்லை!!

Wednesday, October 30, 2024

அக்கினிக்குஞ்சு

பாரதி சொன்னால், சரியாகத்தான் இருக்கும்... ஞான நிலையில், அக்கினியில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லைதான் போலும்.... ஆனால் என் சிற்றறிவுக்கு இன்னும் எட்டவில்லை... ஆனால் அக்கினி குறித்து ஏதேதோ எண்ணங்கள்...  "அணைந்த தணல் / கங்கு" எனும் ஒரு சொல், சிறு பொறியாய்த் தொடங்கி, புராணங்களில் இறங்கி, வள்ளுவரைத் தொட்டு, அக்கா மஹாதேவியை நினைத்து, காரைக்காலம்மையிடம் தாவி, நாயன்மார்களில் ஓடி, பெண்களின் நிலையைக் கசந்து, சங்க இலக்கியத்தில் தீ தேடி என்று கொஞ்சம் தறிகெட்டுத்தான் ஓடுகிறது இந்த மனம்... 

அக்கினியில் எத்தனை விதம் - சுட்டெரிக்கும் கதிர்வீசும் சூரியனும், மோனநிலை தரும் பொன்னொளி வீசும் தீபச் சுடரும், அக்கினி தானே இவற்றில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லையா.... உள்ளுக்குள் மூண்டிருக்கும் தணலும், ஓங்கியெரியும் அனலும், உலகை விழுங்கும் அழலும் ஒன்றா... ஒன்றாகும் தகுதி பெற்றவைதான்.... சூழலைப் பொறுத்தும், வாய்ப்பைப் பொறுத்தும், உயரவும் ஒழியவும் செய்யுமோ... 

ஒருவேளை ஏற்றுக்கொள்பவரைப் பொறுத்தும் மாறுமோ... நெற்றிக் கண்ணிலிருந்து உமிழப்பட்ட பொறி, கார்த்திகைப் பெண்களிடம் முருகனாகவும், மன்மதனைச் சாம்பலாகவும் மாறியது / மாற்றியது.... உள்ளத்தனையது உயர்வு... நெருப்பின் திறம் மாற்றவும், உள்ளத்தின் திடம்தான் தேவை போலும். அறமற்ற செயல் செய்ய திடம் அவ்வளவு எளிதாக வருமா!! மன்மதன் எரிந்தொழிந்தது தன் செயல் அறமற்றது என்ற புரிதலால்தான்!! அதனால்தான் வினைத்திட்பம், வினை செயல்வகைக்கு முன்னாலும், வினைத்தூய்மை வினைத்திட்பதிற்கு முன்னாலும் வருகிறது போலும். வள்ளுவர், வள்ளுவர் தான்... வரிசைப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான்!! 

தீயைப்பற்றி அவர் என்ன சொல்கிறார்!! தீயினால் சுட்டதைப் புண் என்றும் நாவினால் சுட்டதை வடு என்றும் ஏன் சொன்னார். புண் ஆறும் - வடு என்றும் ஆறாது, தீராது. அப்படியானால் "நெருப்பில்லா சூட்டில் வெந்தேனம்மா, வடுவில்லா காயத்தில் நொந்தேனம்மா" என்று அக்கா மஹாதேவி பாடுகிறாரே.... அவர் என்ன சொல்ல வருகிறார் 🤔🤔

காரைக்காலம்மையோ நெருப்பைப் பார்த்தபோதெல்லாம் அதில் சிவத்தைப் பார்த்தவர் - அனலாடி, அழலாடி என்று ஐயனை வியந்து போற்றுபவர். காரைக்காலம்மையைப் போல, சிவ பக்தியால் மணவாழ்விலிருந்து விட்டு விடுதலையாகிய அரசி அக்கா மஹாதேவி. ஒரு அரசிக்கே இந்த நிலையென்றால் மற்றபெண்கள் நிலை என்ன!! இந்த இரண்டு சிவபக்தர்களும் அவர்களது பக்தி கண்டு பயந்த அல்லது கசந்த கணவர்களால் துறக்கப் பெற்றவர்கள். இதில் என்ன வேடிக்கையென்றால், பெரியபுராணத்தில், மாங்கனி பார்த்து பயந்த மடையனது பெயர் குறிக்கப்படுகிறது பரமதத்தன் என்று - காரைக்காலம்மையின் கணவனாக ( பரமதத்தன் என்றால் பரமனின் பரிசு என்று பொருள். -----க்குப் பெயர் பட்டு குஞ்சம்) . ஆனால் கணவனின் பக்திக்காக. தன் குழந்தையை, தாய்க்குத் தலைமகனை, கண்ணீர் வடிக்காமல் அரிந்து, பரிமாறிய பெண் பெயர் இல்லை - அவள் பெயர் திருவெண்காட்டு நங்கை என்று அவள் ஊர்ப் பெயரால்தான் சுட்டப்படுகிறது. பேரைத் தேடியிருக்க முடியாதா...சேனாதிபதியாக இருந்தவரின் மனைவி பெயர் கண்டுபிடிப்பது அத்தனை கடினமானதா!! அல்லது அவ்வளவு அலட்சியமா!! பக்தி செய்வதில் உயர்வென்றும் தாழ்வென்றும் இல்லை என்று சொல்லப் புறப்பட்ட சேக்கிழாருக்கே, தாம் ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் காட்டுகின்றோம் என்று புரியவில்லை என்றால் வேறு எந்த ஆணுக்குத்தான் புரிந்துவிடும் தான் காட்டும் அலட்சியங்கள் அல்லது பேதங்கள்.... 
  • இதில் யாரைச் சொல்ல.... இத்தகைய ஆண்களைப் பெற்று வளர்த்த அன்னையரையா!!! அறம் வளர்க்கும் தந்தையரையா!! சமூகத்தையா!!!
  • உலகெலாம் உணர்ந்தோதற்கரியவனும், உலகம் யாவையுந் தாமுள வாக்கியவனும் கூட இதில் விலக்கில்லை!! மகுடம் பறிக்கப்பட்ட போதுகூட சித்திரத்துச் செந்தாமரையாக இருந்தவன், சீதையிடம் மட்டும், தன் முத்துமாலை கருகும் வண்ணம் கோபப் பெருமூச்சு விட்டானாம்!! எல்லைநீத்த உலகை என் சொல்லால் சுடுவேன் என்றவள் வாளாவிருந்தாளாம்!! முத்துக்கள் நல்லவையானால் தீயில் கருகாது! அப்பேற்பட்ட முத்தே கருகியதென்றால், எத்தனை சூடான மூச்சு அது!! முத்து போலியா, உலகம் யாவையுந் தாமுளவாக்கியவன் போலியா, செந்தாமரை போலியா… தெரியவில்லை!! 
  • மானம் நீப்பின் உயிர் வாழா தசரதனும், போரில் இணையாக நின்ற கைகேயியிடம் அடுத்த மன்னன் குறித்த முடிவைக் குறித்துப் பேசவில்லை. பேசுவதை விடுங்கள், சொல்லக் கூட இல்லை. ஊரெல்லாம் அடித்த பறை கேட்ட சேடி வந்து சொல்லி, சாவகாசமாகத் தெரிந்து கொண்டாள்!! ஆஹா, இத்தனை "அதிகாரம்" ஒரு அரசிக்குப் போதாதா என்ன!! அறம் தவறினால் மானம் நிற்குமா என்ன? இசையும் நிற்கும், வசையும் நிற்கும் (இசை என்ற சொல்லுக்கு, புகழ் என்று பொருள் கொள்க) என்பது புறநானுறு. ஆனால், இந்தக் கதை இன்றும் கைகேயியின் வசையாகத்தான், தசரதனின் இசையாகத்தான் நிற்கிறது. அனைத்து வசைக்கும் காரணம் தசரதன் அல்லவா !! ஆனால் அந்தக் கவரிங் மானோ கவரிமானாகிவிட்டான்!! காலக்கொடுமை!! 
  • உருவு கண்டு எள்ளாமை வேண்டும், உருள் பெரும் தேருக்கு அச்சாணி அன்னார் உடைத்து!! அச்சாணிக்குப் பதிலாய், தன் கை கொடுத்தவள் கதியே இவ்வளவுதான்! பிறர் கதி என்ன!! உருவில் மட்டுமே ஒற்றை (அல்லது இரட்டை) வேற்றுமை... அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? இத்தனையையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறானே, பரந்து கெடுக உலகியற்றியான்.... 
  • நவீன காலத்தில் கதையொன்றும் மாறிவிடவில்லை!! இன்றும், தன் மனைவி சம்பாதிக்கும் பொருள் வேண்டும், அவள் தரும் அறிவார்ந்த நுட்பங்கள், தன் வேலையைச் செப்பம் செய்வதற்கு வேண்டும்; ஆனால் குடும்பம் குறித்த முக்கிய முடிவெடுக்கும் போது, அவள் இருக்கவேண்டியதில்லை, அவளிடம் பேசவோ, சொல்லவோ வேண்டியதில்லை. சொன்னால், அவள் கைகேயி ரூபம் கொள்வாளோ!!! சொல்லாவிட்டால் கைகேயி ரூபம் கொள்வாளோ!!! நமக்கென்ன, யார் / எது எப்படிப் போனாலும், வசை அவளுக்குத்தானே! நாம், நம்பாட்டுக்கு, மீதி அறுபத்து நாலாயிரம் பேரில், யாரிடமாவது, எந்த சோசியல் மீடியவிலாவது, கதைத்துக் கொண்டிருக்கலாம்!!! ஆஹா... எந்த காலத்திலும் தசரதனாய் இருப்பது எத்தனை எளிது... 
  • எல்லா மதங்களும் பெண்களைத்தான் கல்லெறியச் சொல்லி சட்டம் இயற்றின... "அறம் மீறிய" ஒரு பெண்ணை, கருணையே வடிவான, நீதியை நிலை நிறுத்தும் வல்லமை கொண்ட கடவுளின் மகனும் கூட, தந்திரமாகத்தான் விடுவிக்க முடியும்! அவளுடன் பரத்தைமையில் சேர்ந்து நின்றவன் உங்களில் யாரடா என்று கேட்டுவிட முடியாது!! கடவுளே கேட்கவில்லையென்றால், சாதாரண மனிதர்கள் கேட்கத் துணிவார்களா என்ன... ஒற்றையாடையிலிருந்த பெண்ணைத் துகிலுரியும் போது கேட்கத் துணிவற்றுப் போனது பீஷ்மர் மட்டுமா? நாடே நெட்டை மரமாகத்தானே நின்றது!! அரசுடன் / அரசனுடன் சம்பந்தப்பட்டவனை, நமக்கு வேண்டிய சகாயம் செய்பவனை, அத்தனை சீக்கிரம் கேட்டுவிடுவார்களா!! நம்முள் நக்கீரர் யார்? நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்ல, நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறமும் வேண்டும்!! அப்படி அறம் உள்ளவர் யார்தான் இருக்கிறார்கள்!! 
  • இந்த அழகில், உன்னுள் கடவுள் இருக்கிறார், தேடு என்றோ/ நீயே கடவுள் என்றோ சொன்னால் எந்தப் பெண்தான் அந்தக் கருத்தை அப்படியே உள்வாங்கி தபஸ்வினியாவாள்? இத்தகைய "conditioning"-ஐ உடைத்து நிமிர்ந்ததால்தான், மற்றவரைவிட, காரைக்காலம்மை உயர்வு!! அக்கா மஹாதேவி உயர்வு!! இது கூடப் புரியாமல் போயிற்றே சேக்கிழாருக்கு!! 
  • இதற்காக உலகை எரித்துப்போடவா முடியும்… மன்னன் பிழைக்கு, முலையைத்திருகி எறிந்து, மதுரையை எரித்த கண்ணகி போல்! மன்னன் மட்டுமல்ல எல்லோரும்தான் பிழைபட்டார்கள் என்ற வாதம் இங்கேயும் செல்லுபடி ஆகும்தானே… இன்னும் சொல்லப்போனால், எல்லோரும் அதிகப் பிழைபுரிய, ஓரிருவர் கணக்கு மட்டும் சற்றே குறைவாக இருப்பதால், உலகை எரித்துப் போடுவதில், ஒன்றும் தவறில்லைதான்!! அதுதான் அந்தப்பணியை சிரமேற்கொண்டு, உலக நாட்டு அரசியல்வாதிகளும் தீவிரவாதிகளும் பொறுப்பேற்று செவ்வனே செயலாற்றுகிறார்களோ!! 
அழிக்க மட்டும்தானா தீ... ஆக்கவும் திறனுள்ள தீயின் மேன்மை உலகம் முழுதும் உணரப்பட்டே இருந்தது; இருக்கிறது. பஞ்ச பூதங்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும், தமிழினம் தாண்டி பெரும்பாலான இனங்களிலும் ஏராளமாக விரவிக் கிடக்கின்றன. "ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், வலியும், தெறலும், அணியும், உடையோய்!" என்று உதியஞ்சேரல் என்ற மன்னனைப் புகழ்கின்றது புறநானூறு. தெறல் என்றால் வெம்மை, சினம், வருத்துதல், அழித்தல். "தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ" என்று பரம்பொருளை வந்திக்கிறது பரிபாடல். பூவின் நறுமணத்தையும், தீயின் வெம்மையையும் ஒன்றாகக் கருதுவது, இருநிலை ஒப்பு என்பதற்கு எப்பேர்ப்பட்ட எடுத்துக்காட்டு! 

நம் இலக்கியத்தில், தீ என்பது வலி / பயம் தருவதாக மட்டுமே காட்டப்படவில்லை. "அகலாது அணுகாது தீக்காய்வார் போல" என்ற குறள், தீயின் வெம்மையை சரியாகப் பயன்படுத்துவதைச் சுட்டுகிறது. தீக்காய வேண்டிய அளவிற்கு, தமிழகம் குளிர்ச்சியாக இருந்தது என்று நினைக்கும்போது ஆச்சரியமாகவும் இருக்கிறது!! தீ என்ற சொல் எத்தனை முறை திருக்குறளில் வருகிறது?? எங்கோ பதினெட்டு என்று படித்த நினைவு. பாயிரத்தில் தீ, நெருப்பு, எரி போன்ற சொற்கள் இல்லை. ஒளியோடு சேர்த்தால், அறத்திலும் பொருளிலும் இருபத்து சொச்சம் தேறிற்று. ஒளியை, தீயோடு ஒப்பாக எண்ணாவிட்டால் ஒரு பத்து குறையும். அப்படியானால், காமத்துப்பாலில் நான்கைந்து தீதானா… ஆச்சரியம்தான்… 

முன்பொரு காலத்தில் தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். இப்போது யோசித்துப் பார்த்தால். தேவை எது ஆசை எது என்று பிரிப்பது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல இன்று மட்டுமல்ல, சங்கப்புலவர்களுக்கும் சிரமம் தான் போலும். பசியும் தீ தான், ஆசையும் தீதான்!! பசி என்பது அடிப்படைத் தேவை! ஆசை என்பது அடிப்படைத் தேவை இல்லை. அப்படியென்றால் இரண்டுக்கும் தீ என்ற சொல் ஏன்? இரண்டுமே எரித்துவிடும் தன்மையால் ஒன்று தான். கவனமாக இல்லையென்றால் தகுதியற்ற ஒன்றிற்காக ஆசையினாலும் அல்லது பசியால் பத்தும் பறந்து போனாலும் எரிக்கவோ, எரிந்துபோகவோ தலைப்படலாம்! 

தணலென்ற ஒரு சொல் மூட்டிய தீ இந்த இந்த மன ஓட்டம்.... மனதின் வேகம் காற்றின் வேகத்தை, ஒலியின் வேகத்தை விட அதிகம். அவற்றின் பரவலை விட, ஒழுங்கற்றது. ஒலி பரவ ஊடகம் தேவை; காற்று பரவ வேறு ஊடகம் தேவையில்லை; வெற்றிடமாக இருந்தால் இன்னும் வேகமாகப் பரவும். மனம் வெற்றிடமானால், எண்ணவோட்டம் நிற்கும், துறவு வசப்படும் என்றுதான் கூறுகிறார்கள். என்றோ ஒருநாள் எழுதிவைத்த இந்தக் கட்டுரையைப் பார்க்கும்போது, என்றாவது ஒருநாள் வெற்றிடமாவோம் என்ற எண்ணம் நகைப்பைத் தருகிறது. இருந்தாலும் யானை பிழைத்த வேல் உயர்வல்லவா... வெற்றிடமாக முயற்சிதான் செய்வோமே!!

Friday, June 21, 2024

அமையாது உலகு

கேள்விகளே நம்மை வழிநடத்துகின்றன!!! எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்துவிட்டால் வாழ்வின் சுவாரசியம் கொஞ்சம் மங்கித்தான் போய்விடும் போலும். கொஞ்சம் குறைவதென்ன... கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாமல்  போய்விடும்... 

கேள்விகளே இல்லாமல்கூட உலகம் இருக்க முடியுமா என்பதே ஒரு கேள்விதான்

விடை தெரியாத வினாக்கள் கொடுக்கும் தேடல், விடை தெரிந்தவுடன் கிடைக்கும் நிறைவை  விட, கோடி பெறும். நிறைவு தேவைதான் ஆனால் தேடலே ருசிக்கிறது. ஒரு வேளை, மனம் முழுதும் ஓய்ந்து ஒரு மோன நிலை வரும் போது நிறைவு மட்டும் போதுமாய் இருக்கலாம். 

ஏன் இப்படி என்றோ, ஏன் இப்படி இருக்கக் கூடாதென்றோ கேட்டு அறிவு  வளர்ப்பது மட்டுமல்லாமல், எது சரி என்று கேட்டு அறம் காப்பதுவும் கேள்விதானே. விஞ்ஞானம் மட்டுமின்றி   மெய்ஞானமும் கேள்வியின் மேலே எழுந்ததாகத்தானே இருக்க வேண்டும்!!

நீரின்றி அமையாது உலகு என்பது பாதி சரி... கேள்வியின்றியும் அமையாது உலகு....   

கேள்விப் பெருங்கணைகளே பெருந்துணைகளாக நகர்ந்து செல்கிறது வாழ்க்கை நதி...

Friday, January 12, 2024

அம்புப் படுக்கை

நமது இதிகாசங்கள் சொல்லித்தரும் பாடங்கள் தான் எத்தனை எத்தனை.... ஒவ்வொரு வயதுக்கு ஏற்றவாறு பாடங்களின் ஆழம் கூடிக்கொண்டே போகிறது.  

நேற்றிரவிலிருந்து பீஷ்மரை நினைப்பதை என்னால் நிறுத்தவே முடியவில்லை...  அம்புப் படுக்கை என்றால் என்ன, பீஷ்மரைப் போன்ற மாவீரன், புலன்களை வென்ற பெருவீரன்,  தன் வயதொத்த பெண்ணை தந்தை மணப்பதற்காகத் தன் இளமையின் தேவைகளைத் துறந்த அன்பாளன் (அவர் அந்தப் பெண்ணை முதலில் பார்த்திருந்தால் கதையே வேறு என்பது வேறு கதை ), தன்  தேசத்திற்கு  ஆற்றவேண்டிய  பணிகளுக்காக அவமானங்களைச் சகித்துக் கொண்ட தலைவன், குழந்தை பெற்றுக் கொள்ளாவிடிலும் தனது தம்பிகள், அவர் மகன்கள், பேரன்கள் என்று ஒரு பெரும் கூட்டத்திற்குத் தந்தையாக இருந்தவன் எப்படி அம்புப் படுக்கையில் விழ முடியும்? அப்படியானால் அம்புப் படுக்கை  எதன் உருவகம்? என்ன சொல்ல நினைக்கிறார் வியாசர் என்ற கேள்விகள் அலைபோல எழுவதும் விழுவதுமாக இருந்தன ஓயத்தான் இல்லை, பதிலும் இந்தக் கட்டுரையும் மனதில் வரும் வரை!! 

அறம் அறிந்தவன் அறம் பிழைக்கும் போது அவனது மனமே அவனைச் சுட்டெரிக்கும் அல்லது அம்பாய்க் குத்தும்.  அப்படி வாழ்நாள் முழுவதும் ஒருவர்  இழைத்த தவறுகள், பிழைத்த அறங்கள் அனைத்தும் வரிசை கட்டி நிற்குமானால் அது அம்புகளின் அணிவகுப்புப் போலத்தான் இருக்குமாயிருக்கும். தன் குல ஆண்களுக்காக அவர் செய்த அறமீறல்கள் அனைத்தும் கண்முன்னே நின்றிருக்கும். நினைத்த நேரத்தில் உடலை விட்டு நீங்கும் வல்லமை பெற்றிருந்தும், நீட்டித்த நினைவுகள் அவரைத் தின்றிருக்கும்.... அம்பாய் நின்றிருக்கும்... தன்  தேசத்தின் வலிமையை, தன் உடல் வலிமையை, புத்தி கூர்மையை பயன்படுத்தி எத்தனை பேரை அவமதித்தார், வேதனைப்படுத்தினார்  என்று ஒரு பெரிய வரிசை நின்றிருக்கும்!! 
  • தவறென்று தெரிந்தும், முட்டாள்தனம் என்று தெரிந்தும், தம்பிகளுக்காக, அம்பா அம்பிகா அம்பாலிகா என்ற பெண்களின் விருப்பத்திற்குப் புறம்பாக, தம்பிகளுடன் சேர்த்துவைக்க முயற்சித்தது, அவர்கள் கெஞ்சியும் கதறியும் மனம் இரங்காமல் நடந்து கொண்டது ஒரு அம்பு.  
  • கண் தெரியாத திருதிராஷ்டிரனுக்குப்  பெண்ணெடுக்க காந்தாரம் சென்றது தவறில்லை ஆனால் பெண் கேட்கப்போனவர் சேனையோடு போனது, மிரட்டி பணியவைப்பதுதானே!!  அது ஒரு அம்பு 
  • திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தட்டிக் கேட்க வாய்ப்புகள் இருந்தும், (அரசு பதவியின் வசதிகளை நினைத்து அல்லது பாசத்தின் காரணமாக)   தட்டிக் கேட்காமல்,  வாளாவிருந்தது ஒரு அம்பு;  தான் அறம் மீறுவது மட்டும் பிழையன்று, அறம் மீறப்படும்போது தட்டிக் கேட்காமல் இருப்பதும் பிழையே..அறம் மீறலே.. அம்புகளை உருவாக்கும் செயலே!!
  • சகோதரர்களுக்குத் துரோகம் இழைத்த துரியோதனன் பக்கம் நின்ற பிழை ஒரு அம்பு; துரியோதனாதிகளும் பாண்டவர்களும் ஒரேவிதமான உறவென்றாலும், துரியோதனனுக்காக யுத்தம் புரிந்தது ஒரு புறம் என்றால், வில்லை வெட்டி எறிந்து விட்டு வெளியேறிய விதுரனைப் போல் அல்லாமல், அத்தனை அவமதிக்கப்பட்டும் அறமற்ற துரியோதனனுடன் நின்றது அடுத்த அம்பு...
  • விரும்பிய நேரத்தில், உடலை துறக்கும் வலிமையும் வரமும் இருந்தும், பேரனுக்குப் பிள்ளைகள் வந்தபின்னும், சந்தனு வம்சத்தைக் காப்பதாக கொடுத்த வாக்கை காப்பதான கற்பனையில் சரியான முறையில் காக்கவும் இல்லாமல், வம்சத்தின் ஒருபகுதிக்கு துரோகம் இழைத்தும் வாழ்ந்தது அடுத்த அம்பு. 
  • தன்னைக் காப்பதும் அறம். வள்ளுவர் இல்லறத்தாருக்கு கூறிய பதினோரு வகை அறங்களிலும் பிழைப்பட்டார். துறவறத்தாருக்கான அருளுடைமை, வாய்மை இரண்டிலும் பிழைப்பட்டார். ஆனால் எல்லாவிதத்திலும் தம் பெருமை துறந்து வாழ்ந்ததும் அம்பாக நின்றிருக்கும். 
என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த அம்புகளின் வீரியம் அப்பேர்ப்பட்ட வீரனை வென்றது; மரணப்படுக்கையில் குத்திக் கிழித்தது. 

அனைத்து செயல்களும், செயலின்மைகளும் அவற்றின் தன்மைகளுக்கேற்ப விளைவுகளைத் தருகின்றன. அவற்றை மாற்றும் சக்தி இயற்கைக்கும், இறைக்கும் கூட இல்லை. அதனால் அறியாமல் செய்த பிழை என்று தப்பித்து விட முடியாது. ஆனால் அறிந்தே செய்யும் பிழைகள், குற்றவுணர்வு என்னும் அம்புகளாக ஒவ்வொரு நிமிடமும் காத்துக்கொண்டிருக்கின்றன.  உண்மையில் மரணம் வரை காத்திருப்பதில்லை அவை; அன்றாடம் நம்மைச் சந்தித்துக் கொண்டேதான் இருக்கின்றன. அன்றாடம் இல்லாவிட்டாலும், அவ்வப்போது நமது அம்புகளை கவனித்து,  உருவிப் போட வேண்டும் என்ற காரணத்திற்காக, ஒவ்வொரு வருடமும், பொங்கலுக்குப் பின்னால், சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் ஆரம்பித்த பின் வரும் வளர்பிறை அஷ்டமியில் பீஷ்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்வோரும் உண்டு. நம்முள் இருக்கும் பீஷ்மரைச் சுத்தம் செய்தலே தர்ப்பணம் செய்தலை விட தலையாய கடன்...   

எத்தனை விதமாக, அறம் பிழைத்தலின் விளைவுகளை  சொல்லித் தருகிறது என் தேசம்!!! என்ன பேறு பெற்றேன் இத்தகைய தேசத்தில் பிறக்க.... இன்னொரு பிறப்பில்லாதிருக்க வேண்டும்!! அப்படியிருந்தால், இந்த தேசத்திலேயே, தமிழ் பேசும், தமிழ் இலக்கியத்தைக் கொண்டாடும் மனிதப் பிறப்பாகவே பிறக்க வேண்டும்!!! 

எந்தப் பிறப்பிலும், இந்தப் பிறப்பின் எஞ்சிய நாளிலும், எந்த நிலையிலும் மனதால், சொல்லால், செயலால் அறம் பிழைக்காமல் வாழ வேண்டும்... இது ஒன்றே பிரார்த்தனை... 

Friday, February 18, 2022

எழுதாமல் போவேனோ -தவிப்பு 2

வாசனைகள் மூளையின் மேற்பரப்புகளை விட்டு, மூக்குக்கு மேலே, கண்களுக்குப்பின்னாலுள்ள ஆல்ஃபாக்டரி பல்ப் என்ற உணர்வு மையத்துக்குச் சென்று விரிவான நினைவலைகளை எழுப்புவதோடு நம்முள் அமிழ்ந்துபோன எண்ணங்களையும் தூண்டுவதாக இன்றைய அறிவியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன. நேற்று வாசித்த ஜெயமோகனது கட்டுரை  என் கண்களுக்கு வாசம் உணரும் திறன் கொடுத்த பூ!!

"இலக்கியம் அறிந்தவனின் வாழ்க்கை ஒரு கவிதைபோல. அது ரத்தினச்சுருக்கமாக இருக்கலாம். எளிமையானதாக இருக்கலாம். அவனுடைய அன்றாட நாட்கள் மிகச்சாதாரணமாகக் கடந்துசெல்லலாம். ஆனாலும் அவன் வாழ்க்கை எல்லையற்றது. அதன் ஒவ்வொரு சொல்லுக்கும் முடிவிலாத பொருள் உண்டு. அவன் வாழ்க்கை விதைகளின் குவியல். அது உறங்கும் பெருங்காடு. ஒரு பூவின் இதழிலிருந்து மானுடத்தின் அனைத்து வசந்தங்களையும் உணர்ந்துவிட முடியுமா? வசந்தங்களை உருவாக்கி உருவாக்கி விளையாடும் பிரபஞ்ச லீலை வரை சென்றுவிட முடியுமா? " என்ற கேள்விப் பெருங்கணைகளோடு இல்லை இல்லை பொங்கிப் பிரவாகிக்கும் கங்கையாக, தூங்கிக் கிடந்த என் விதைகளை உயிர்ப்பிக்க  முயன்றார் 

2016ல்"எழுதாமல் போவேனோ"  என்ற கட்டுரையை எழுதும்போது நான் அறிந்திருக்கவில்லை எனது எழுத்துலக வனவாசம்  எவ்வளவு வலுவானது என்று!! வனவாசம் வாழ்வின் தடத்தை மாற்றிபோடும் வல்லமை கொண்டதென்று!! வாழ்வின் சிலதளங்களிலான (இனிய) பயணங்கள் , வேறு சில தளங்களில் பயணிக்கவிடாமல்  வனவாசமாக மாற்றிவிடக்கூடும் என்று!!  ஜெயமோகன் சொல்லாதவரை உணர்ந்திருக்கவில்லை இந்த வனவாசம் என் வானவில்லின் வர்ணங்களை உறிஞ்சியிருந்தது என்று!!! வழித்தடங்களும் வனவாசங்களும் மாறி மாறி பல்வேறு திசைகளுக்கு இழுத்துச் செல்கின்றன என்று!! 

கம்பனும், வள்ளுவனும், பாரதியும் இன்னபிற தேவதைகளும் (தேவதைகளுக்கு ஆண்பால் என்ன, இம்மூவரையும் இந்த சொல்லுக்குள் எப்படி அடைக்க, எப்படி ஒதுக்க?) என்னுள் தூவிச்சென்ற பல்லாயிரம்  விதைக்குவியலோடு உறங்கியே தொலைந்த பெருங்காடுகளும், உறங்காமல் உறைந்த ரயில்களின் அட்டவணைகளுமாக நகர்கிறது வாழ்க்கை.... 

விதைத்தது இம்மூவர் மட்டும்தானா...என்னைக் கடக்கும்  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதரும்  விதைக்கவில்லையா... தொலைந்தது எது? தொலைத்தது யார்? இரண்டும் ஒன்றல்லவோ... காரணமும் கருப்பொருளும் நானல்லவோ... 

எழுத்து என்னை வாழ்வித்தகாலம் போய், பிச்சியாய் எழுத்து என்னுள் தவித்தலைந்து,  கர்ப்பகாலம் தாண்டிய சேய் போல வேறெதுவும்  செய்யவொட்டாமல், வலியோடும் நிறைவோடும் பிறப்பெடுத்த காலமும் போய், பேசப்பிடிக்காமல், பேசத்தோன்றாமல், ஓர் ஆழ்ந்த கடலுக்குள் நீண்ட அடர் குகைக்குள் உட்கார்ந்துகொண்டு என் எழுத்து தவம்செய்கிறதோ... இல்லை மாய்ந்தேதான் போனதோ...

நான் மூச்சுத்திணறி நின்ற போதும் கூட என்னுடன் பயணித்த இலக்கிய நதி தேங்கிநிற்கிறது... என் பேனா பேச்சுத்திணறி ஐந்தரை  ஆண்டுகளாகிறது. எப்படி மீட்டெடுப்பேன் என்னுள் தொலைந்த / என்னைத் தொலைத்த  கம்பனை, வள்ளுவனை, பாரதியை... 

பார்ப்போம் காலம் என்ன பதில் சொல்கிறது என்று... தேங்கி நிற்பது காடு வளர்க்கக் காத்திருக்கும் அணையா, காத்துக்கிடந்து காயவிருக்கும் துளியா என்று... விதைகள் தூங்கியோ எரிந்தோ தொலையுமா, ஜெயமோகன் ஜெயிக்கிறாரா  என்று... 

காடு வளர்ப்பதும் நதியைக் காப்பதும் யார்? காலம் எப்படி பொறுப்பாகும்!!

Friday, May 8, 2020

மரணத்தின் விளிம்பிலிருந்து....

மரணம் தொட்டுவிடும் தூரத்தில்தான் இன்னும் இருக்கிறது!!   வீட்டைவிட்டு வெளியில் கால்வைத்து. மனிதர்களை நேரில் பார்த்து ஐம்பது நாட்களுக்கு மேலாகிறது!!  இந்நேரத்தில் வாழ்வை உற்றுநோக்கும் வயதும்அனுபவமும், மனதும், சிந்தனையாளர்கள் தொடர்பும் வாய்க்கப்பெற்றது முன்வினைப்பயன்! வேறெந்த தலைமுறைக்கும் வாய்க்காத கொடுப்பினை! வாழ்வியல் தத்துவங்கள் புடம்போடப்படுகின்றன! சில உடைந்துவிட்டதாக தோன்றுகின்றது; வேறு சில தினமும் வெவ்வேறு கோணங்களைக் காட்டுகின்றன! இயற்கை நடத்தும் மிகப்பெரிய பாடமாக சில நேரம், பாரம் குறைக்க இயற்கைசெய்யும் முயற்சியாகச் சிலநேரம் என்று இந்தகாலகட்டம் மிகப்பெரிய ஆச்சரியத்தையளிக்கிறது. விளைவு, மீண்டும் ஓர் எண்ணக்கோர்வை!!


  • அன்பைத்தவிர பெரிய தவமில்லை. அன்பென்பது ஒரு வெளிப்பாடாய், உணர்வாய்த்தோன்றிய காலம்போக, அன்பு ஒரு தன்னிலையிருப்பாய் தோன்றுகிறதுஓரிருவர்மேல் மட்டும் காட்டப்படும் அக்கறை தாண்டி, அனைத்து உயிர்கள்மீதும் பொழியும் அனபைத்தவிர தவமொன்றுமில்லைநதியாய், நதியில் பயணிக்கும் இலையாய் இருப்பதன்  பொருள் இதுவாகத்தான் இருக்கக்கூடும்... நதிக்கு இன்னார்மேலென்று தனிப்பட்ட பிடிப்பில்லை... யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சலசலத்து ஓடும் அதன் ஓட்டம் நிற்பதில்லை... அழகு குறைவதில்லை... யாரும் நீர்சேந்தவில்லையென்றோதேவைக்கு  அதிகமாகக் கொண்டு செல்கிறார்கள் என்றோ எந்த சலனமும் இல்லை... நீர்சேந்துவோரின் தகுதியோ மனநிலையோ  ஒருபொருட்டுமில்லை...
  • நன்றி என்பது மிகவும் முக்கியமான உணர்வு! கடினமான ஒரு நாளைக்கூட  அழகியதாய் மாற்றும் வல்லமை கொண்டது. வாழ்வு மிச்சமிருப்பதே நன்றிபாராட்டப் போதுமானதாக இருக்கிறது!! அதற்குமேல் கிடைக்கும் அத்தனையும் பெருங்கொடையாகத் தெரிகின்றது!!!  மரணம் முந்திக்கொள்வதற்குள், நம் வாழ்வைச் செம்மையாக்கிய  அத்தனைபேருக்கும் நன்றி சொல்லித்தீர்த்துவிட முடியுமா!?!?!
  • தடிகொண்டு அடித்து பழுத்தது ருசிக்காது, தானாகப்  பழுத்தது ருசிக்கும்! உண்மையாகவா!?!?!  வாழ்வின் ஓட்டம் என்ற பெருந்தடியால் அடிபடாமல் பழுக்கவும் முடியுமோ!!  
  • இனையர் இவரெமக்கு இன்னம் யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு என்பது வள்ளுவம். இவர் எமக்கு இத்தனை அன்புடையவர், நாமும் இவர்க்கு அப்படியே என்று புகழ்ந்துரைத்தால் நட்பு சிறப்பிழக்கும் என்பது பொருள்! நட்பின் தரம் சொல்லாமல் அன்பின் ஆழம்  காட்டாமல் நன்றியுரைப்பது எப்படி?
  • நட்பு, கொடை, தயை இம்மூன்றும் குடிப்பிறப்பு என்பது ஒளவை வாக்கு. என்னைச் சுற்றியிருப்போர் அத்தனை பேரும் தன்னலம் பாராட்டா நட்புடனும், வாரி வழங்கும் கொடையாளராகவும், பேரன்பு கொண்ட கருணையாளராகவும் இருப்பது எப்படி? சூழல் காரணமா? குடிப்பிறப்பா? இவர்களெல்லாம் வெவ்வேறு மாநிலத்தில் பிறந்து, வெவ்வேறு மொழிபேசி, வெவ்வேறு குடிப்பிறந்தோர்!!
  • மரணம் எப்போதும் இதே தூரத்தில்தான் இருந்தது, எப்போது வேண்டுமானாலும் எட்டிப்பிடித்துவிடக்கூடியதாக! ஏதோ இப்போதுதான் அருகில் வந்ததுபோல் ஏன் இப்படி ஒரு பதற்றம்!!! என்ன, ஒரு வித்தியாசம் சொல்லலாம்! 2020க்கு முற்பட்டகாலத்தில் மரித்தோரின் உடலு றுப்புகளை தானம் கொடுத்திருக்கலாம் இப்போது அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது!
  • வாழ்க்கை எப்போதுவேண்டுமானாலும் முடிந்துவிடக்கூடுமென்ற நினைவு, அறிவு எப்போதும் வேண்டும் என்ற நினைத்த தேசத்திலும்கூட வாழ்க்கை வினோதமாகத்தான் இருக்கிறது!!! மனிதர்களின் இயக்கத்தை மரணபயம் புரட்டிப்போட்ட கடந்த சிலவாரங்கள் வினோதமானவை!! மனிதர்களின் ஆழ்மனம் தன்னை எத்தனை விதமாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளது... அதிநுட்பமான அழகியலும், அடியாழத்தைத்தொட்ட அவலங்களுமாக!!!  
  • தெரிந்தோர் தெரியாதோர் என்ற பாகுபாடின்றி உணவுக்கு வழிசெய்ய களம்புகுந்தோரும், இருக்கிறது இல்லை என்ற பாகுபாடின்றி பொருட்களை வாங்கிக் குவித்தோருமாக உலகம் எத்தனை விதமான வேறுபாடுகளைக்கொண்டது!!
  • எதுவும் உறுதியில்லை என்று புரிந்தபின்னும் இயல்பாய், உற்சாகமாய், அழகாய் வாழ்வோரும், இத்தனைக்குப்பிறகும், சிறுவிஷயங்களுக்கும் அலட்டி, தன்னையும் பிறரையும் வருத்துவோரும் வாழும் முரண்....
  • வலிமிகுந்த / குழப்பமான நிலையிலும் ஆதாரமற்ற  கருத்துகளை ஆராயாமல் அப்படியே பகிர்ந்துகொள்ளும் மனிதர்கள்  படித்தவர்களாக, பொறுப்பு மிக்க பதவியிலிருப்பவர்களாக இருப்பது ஆச்சரியத்தின் உச்சம்! நிறைகுடம் தளும்பாது!! குறைகுடம் கூத்தாடும்!! படிப்பும் பதவியும் பொறுப்பும் நிறைகுடமாக்காது போலும்!!!!
  • பொங்கிவழியும் கோப்பைகள் எதையும் உட்கொள்ளும் தன்மையற்றவை, உங்களைக் காலி கோப்பையாக வைத்துக்கொள்ளுங்கள் என்றொரு அறிவுரை உண்டு! பொங்கிவழிந்த கோப்பைகளும் (குறைகுடங்களும்) அமைதியாய் தம்மை நிரப்பிக்கொண்ட காலிகோப்பைகளும் (நிறைகுடங்களும்) நிரம்பிய அழகிய முரண் இவ்வுலகம்!
  • 2019 ஆகஸ்டில் இந்திய துணைக்கண்டத்திலுள்ள பெருவாரி நதிகள் பொங்கி அருகிலுள்ள சிவாலயங்களுக்குள் புகுந்ததை ஊடகங்கள் தெரிவித்தன! 2020ல் மனித சஞ்சாரம் முழுவதும் / பெரும்பாலும் அடங்கிவிட்டது! அசுரராய் மாறிவிட்ட நரர்களிடமிருந்து தம்மைக் காக்க நதிகள் நடத்திய வழிபாடு வெற்றிபெற்றதோ!!  ஒருவேளை, இந்த வைரஸ் நோயில்லையோ!!  உலகைக் காக்கவந்த மருந்தோ!!
  • பொருளாதாரத்துக்காக குடிமக்கள் நலனை அடகுவைக்காத எங்கள் தேசம் என்று நம்முள்  சிலர் வலைத்தளங்களில் மார்தட்டிய  சிலநாட்களில் கள்ளுக்கடையைத் திறந்த அரசாங்கமும், காய்கறிக்கடையை விட கள்ளுக்கடையில் கூடிய கூட்டத்தால் வரவிருக்கும் காய்ச்சலும், கர்வமில்லாமல் அலட்டாமல் இருக்கவேண்டியதன் அவசியத்தை நினைவுறுத்திய அவலம்யார்கண்டது, இதுகூட இயற்கையின் elimination process-ன் prioritization technique-ஆக இருக்கலாம்!
  • இன்னும் 30 மணியோ, 30 நாளோ, 30 வருடமோ, நாம்மட்டுமே இட்டு நிரப்பக்கூடிய விஷயங்கள் எவை என்று தெரிந்தால் எவ்வளவு எளிதாயிருக்கும்!! உண்மையில் அப்படி ஒன்றும் இல்லையோ... பேரறிஞர்களுக்கு மட்டும் அப்படி ஒரு குறிக்கோள் இருக்கிறதன்றோ! அல்லது  அப்படி ஒரு குறிக்கோள் இருப்பவர்கள் மட்டும்  பேரறிஞர்கள் ஆகிறார்களோ!! பேரறிஞராகவெல்லாம் ஒன்றும் ஆகவேண்டாம்! வேலையைப் பாதியில் விட்டுச்செல்வதாக குற்ற உணர்வின்றி விடைபெற்றால் போதும்!

Wednesday, January 22, 2020

Random Thoughts - 2020


After long time I decided to capture my random thoughts as a blog… Okay, not completely random… random thoughts around a seed poem from Thirvasagam.

ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
    கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்  

I happened to listen to this poem in a temple recently; it was a mesmerizing experience; sure, the way the temple priest sang this song was adorable and his voice was so sweet but it was more than just the voice and musical talent!! Manickavachagar ruled in every bit and forced me to read the entire poem & mull over it!! What is shown in this blog  is not the complete poem - there are 21 stanzas in the poem; this blog covers just half a stanza that struck me hard in the temple; it roughly translates as below

He is a friend ineffable by words; He dwells in the hearts of His devotees
He is the God of the flawless; Hey girls, dedicated to serve His temple!!
Where is He from? what is His name? Who is His Kin? Who is stranger?
How can we hymn Him!! I am baffled at this very thought, my girl…

Though the entire poem had deep meaning as well as the ability to touch the heart and mind, two phrases stuck to my thoughts: "ஓத உலவா ஒருதோழன் / a friend ineffable by words" and "ஆருற்றார் ஆரயலார் / Who is His Kin, who is stranger".

ஆருற்றார் ஆரயலார் - this is a very strong question that can shake the foundation of existence itself I think - both in its literal meaning as well as what it implies deeply.

Whoever we consider as kin may not be kin and a stranger may not be a stranger after all… just one word/deed from a kin can make you feel that they are total strangers and a small deed from a stranger can make you feel that they are the best of your kith. உற்றாரின் ஒரு சொல் பற்றறுக்கவைக்கக் கூடும்; அயலாரின் ஒரு செயல் அன்பை உலகளாவ விரிக்கச்செய்யலாம்! இதில் யாரை உற்றார் எனபது? யாரை அயலார் என்பது?

No friend is a friend forever and no stranger is a stranger forever!! All who care may not be able to take care… all who take care may not care and may not be caring… when you care and others don’t, you may feel like a stranger!! Who is a friend? Who is a stranger? Who can say?

Valluvar has another explanation for this. In his chapter on Love (under domestic virtue), he talks about transitivity! Love leading to eagerness and eagerness leading to friendship!! Love that starts at home should expand to include everyone! When you start to expand the boundary between kin and strangers disappears. Shiva is an embodiment of love or anything of love is Shiva. The transitivity induced by that love engulfs the whole universe and there is no one (even better, there is nothing) not in the realm of such a love. Considering this, for Him and those who want to be like Him, who is a kin? who is a stranger?

"ஓத உலவா ஒருதோழன்" Shiva is a great friend who cannot be praised enough is the translation. Who can list down all his greatness? He is a male, He is a female and a transgender too! He is in earth, sky and everywhere! He has no beginning and no ending!! He is in all forms yet does not have a form!! Any description will be inadequate to be all exhaustive!! All languages will fall short of words to praise him!

Is Shiva the only friend whose praise is indescribable? Valluvar feels it is applicable to all friendships!! He thinks the moment friends praise one another that (s)he is intimate with us and we so much with him(her), the friendship appears mean! Interesting that Valluvar lists "Natpu" / "Friendship" as part of "Wealth" section not part of "Virtue" section!!!

Sundarar is supposed to consider Shiva as a friend and Manickavachagar as a Guru. But this line shows that even Manicavachagar considered Him as a friend too!! Hmm... 

More and more I think about this, it looks like, when all the friendship with humans feel futile, one can consider God as the only friend!! On the other hand, friendship with humans need consistent attention; but with God, one can afford to pay less attention or no attention for a prolonged period and resume as if there was no such break!! Interesting…. Not sure if God exists or not but God is a very useful construct!! The belief that "there is a dependable friend who is ever loving irrespective of whether you reciprocate or not, ever caring, who will never let you down, who does not have personal agenda / preferences, who is absolutely neutral and who will never just 'use' you" can save many from becoming insane… Hmm.... 

This compilation sounds half done (at least to me)… there are several other unfinished thoughts that are not captured as words yet… Hope to come back to it soon....

Saturday, July 6, 2019

வீடென்று எதைச் சொல்வீர்?


அறியாத வயதில், பள்ளிப் பருவத்தில், "வீடென்று எதைச் சொல்வீர்?" எனத்தொடங்கும் கவிதை வாசித்தது ஒரு இரவு நேரம்து இன்றும்  நினைவில் உண்டு. அப்போது, அந்த கவிதை சொல்லும் வறுமை புரியவில்லை; ஆனால் அந்த கேள்வி ஒரு வித்தியாசமான கேள்வியாய்ப் பட்டது;  வீடென்றால் என்னவென்று எப்படி தெரியாமல்போகும், அந்தகேள்விக்கு வேறு வேறு பதில்களும் எப்படி இருக்கக்கூடும் என்ற வினாக்களோடு உறங்கிபோனேன்மற்ற வரிகள் நினைவில் நிற்கவில்லை; எழுதிய கவிஞர் பேர் நினைவில்லை; இன்னும் சொல்லப்போனால் கவிஞர் பேர்பார்த்துப்படிக்கும் தெளிவும் அறிவும் இல்லாத வயது; ஆனால் ஏனோ அந்தக் கேள்வி மட்டும் ஆழமாய்ப் பதிந்துபோயிற்று; வாழ்வின் பல்வேறு படிநிலைகளில் அவ்வப்போது மனதில் வந்துபோயிற்று!!

அந்தக்கேள்வி இன்று வேறு தளத்தில் நிற்பதாகப்படுகிறது.  நவீன குறுங்கவிதையொன்று "வீடென்று எதைச் சொல்வீர்உண்டுறங்கி உடல் கழுவி உள்ளம் களைத்து ஒடுங்குமிடம்என்கிறதுகடந்த சில மாதங்களாய் பயணமே வாழ்க்கையாயிற்று!! ஒரு சூட்கேசுக்குள் வாழ்க்கை நடத்துவது எப்படி என்று கற்றுக்கொள்ளும் வாய்ப்பு!! ஓரிரு வாரங்களுக்குமேல் எந்த இடத்திலும் வசிக்கவில்லை!! வீடு ஹோட்டல் போலவும் ஹோட்டல் வீடு போலவும் தெரிகிறது!!  எது வீடு? எல்லாமும் வீடுதான்!! இல்லையென்றால், எதுவும் வீடில்லைதான்!

பற்றறுப்பதற்காக, துறவிகள் ஒரு ஊரில் ஒரு நாளுக்கு மேல் தங்குவதில்லை/  தங்குவதற்கு சாஸ்திரத்தில் அனுமதியில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  நான் துறவியில்லை; நான் தங்குமிடங்கள் மிகவும் அதிநவீன அதியற்புதமான வசதிகள் கொண்டவை; ஆனாலும் வீடென்று எதைச் சொல்வீர் என்ற கேள்வி பற்றின்றி மனத்திலாடுகின்றது! ஆனந்தமாக!!

பிற்குறிப்பு: இந்த கட்டுரைக்காக மூலக்கவிதையைத் தேடிப் படித்தேன். கவிதைக்காட்டும் வறுமை முகத்தில் அறைந்தது. ஏன் மாலன் கவிஞராய்த் தொடராமல்  பத்திரிக்கை ஆசிரியராய், தொலைக்காட்சியாளராய் மாறிவிட்டார், வாய்ப்பு காரணாமாகவா பிடிப்பு காரணமாகவா என்ற கேள்வியும் இடித்தது!

மூலக்கவிதை:

வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை என் வீடு
ஜன்னல் போல் வாசல் உண்டு
எட்டடிச் சதுரம் உள்ளே
பொங்கிட மூலை  ஒன்று
புணர்வது மற்றொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்
தலை மேலே  கொடிகள் ஆடும்
கால்புறம் பாண்டம் முட்டும்
கவி எழுதி விட்டு செல்ல
கால் சட்டை மடித்து வைக்க
வாய் பிளந்து வயிற்றை எக்கிச்
சுவரோரம் சாய்ந்த பீரோ 

Thursday, May 23, 2019

Giving and Getting - Two sides of our needs!

Giving or sharing is as much a need as getting!! Interesting!! This never struck me till recently. I was thinking that someone who is focused / who finds joy in giving not just from getting is a more evolved soul!! But it just struck me that any compulsion is a limitation - irrespective of whether it is giving or getting.

Giving could be in different planes of life - physical/materialistic, intellectual or emotional!! By physical/ materialistic I mean the likes of I cooked tasty food and I want to make money out of it or share with those who are close to me or any one near me or any one that needs it!! Intellectual plane means, I have invented / discovered / learnt something intellectually intriguing or beneficial to others and I want to make money out of it, share with who are close to me, any one near me or any one that needs!! Same is with emotions!! I have an emotion, I want to share with those who are close to me, any one near me or any one that would enjoy the emotion / share / heal / benefit from the emotion; there could also be "make money out of it" if I can generalize or make it sensational or if I am a celebrity :-)!!

We can clearly see the evolution curve across giving too - who are we giving, why are we giving and how much are we giving etc. play into it!! In fact what we are giving could be a critical fact too - giving left overs / anything that we don’t want for ourselves / anything that feels more like a liability than an asset or giving what we still need/enjoy or giving what we consider as precious or even more grand - we create something only for the purpose of giving!!

But it is interesting that getting is most often associated with "need" and giving is not!! What I am realizing is, if you feel like giving and there is no one to receive, immediately it starts to feel like a need!! When people want to get more than they need is named as greedy!!  Some people may want to give more than what they have/can/should or what others can/should hold / receive!! Why would that not be categorized as greedy? Of course, giving only to limited people is related to greed sometimes! But giving to wider audience is never related to greed!! To me that feels like greed too!! I am trying to curtail my greed in that space after I realized that!!

How can I be like wild flowering plant - I create something or blossom because it is my nature; if anyone enjoys the flower or not does not matter!! Or even better, how can I be like a river…. flow in the path I enjoy, let anyone enjoy the flow of the river or water or anything that grows in the river or even let them grow in the river if they want to… it is okay even if none of the above happens… the river still continues to flow… hmm… interesting… how can I evolve to this level??

Sunday, May 19, 2019

To Be or Not To Be - Continued…


This is a continuation of my earlier article on whether to extendlife with medical support or not. Recently I witnessed such an extensive effort by a family to bring back their father after a long struggle.  The father lost his ability to remember any short-term past. Many of the vital life parameters were not stable. Sure, money was not a constraint but everything else was! Obviously the others in the family had their job to go to, other needs to attend to (such as their children or spouses etc.)!! But with their relentless effort, the father is back home after about seven months of hospitalization!

I was thinking deeply about this episode. It was literally like the Satyavan Savitri story in Indian epics; the family fought with Yama (the God of death) and brought back the father. This has resulted in two important outcomes in addition to reviving the father I think.

Confidence to the elderly: All elders in the surrounding now know that the children will take care of them in the old age. The care exhibited by the sons is so touching. Of course most of us love our parents. But it takes more courage and determination than just love to withstand the pressure for seven months without knowing what will happen, with people suggesting to take shortcuts, with pressure of other dimensions of life. I salute the sons and the mother for this huge effort.

A great lesson to the next generation: All children (in all ages) have witnessed how to take care of an ailing father without complaining about personal difficulties, how not to lose hope at any point time, how to support each other in times of difficulties.

There is humanity left in the world still looks like!! I guess, we should spread these stories around instead of spreading stories about unsupported parents, children not calling parents etc.!!  While I still think that no one should spend such heroic effort to keep me alive, if I get into the situation of the father, I strongly believe that the family has brought back confidence in many lives! Living a grand life is all about just that - giving confidence to others… and this family has shown how to live life to its grandeur… 

Saturday, July 28, 2018

Saha Naa Vavatu

I am contemplating on a poem from Krishna Yajur Veda - the one known as Shanti mantra, starting with Om Saha naa vavatu. It is a prayer both the teacher and student offer together when they start the lessons for the day. It roughly translates to

May God protect both of us
May God nurture both of us
May we work together with great energy
May our study together be effective (May it bring internal and external light / illumination )
May there be no animosity among us
Let there be peace

What struck me was the last but one line which says "May there be no animosity among us". Being a coach by profession, I kept thinking deeply about this single line for more than a month. A coach has to make the coachee think in new ways, learn, grow to be more effective / powerful than the coach herself. There are a lot of opportunities for difference of opinions and disagreement along the way. To make someone think in new ways, the coach has to make them realise the limitation of their current thinking. To make them learn, the coach has to help them unlearn many things. The coach also has to push the coachee to actions outside their comfort zone. Three different dimensions where the coachee can hate the coach!!! When the coachee becomes more conversant than the coach herself, the coach has the potential to hate the coachee!! If the coach has to deal with more coachees concurrently, it gets more complex. Dynamics between the coachees, and relationship of each coachee with the coach (both reality as well as perceived by the coach & other coachees) can aggravate it further. The outputs produced and outcomes created by the coach and coachees can trigger additional conflicts too. Wow!!

Not only that!! Though coaching process appears to be linear, it is spiral; that is, challenging/realising the limitation of current thinking, teaching/learning new ways, pushing into/applying the new ways and excelling in the new ways happen multiple times in multiple planes! In fact it is not even a regular or smooth spiral rather it is a squiggle with a quite number of instances for the egos to clash and for animosity to build!! Hmm…

The other intriguing point is the story behind the verse!! The story goes like this - When Yajnavalkya disagrees with his Guru Vaishampayana, the guru asks Yajnavalkya to return all that he learnt from the guru. Yajnavalkya vomits his knowledge in the form of food; the other disciples take the form of tittri birds and consume the vomited food and then produce what is known as Tittirya Upanishad - a part of Krishna Yajur Veda. Yajnavalkya quits his Guru and goes on to produce Shukla Yajur Veda. 

I am no scholar who can say whether this particular poem was written by Yajnavalkya or his Guru Vaishampayana or his other disciples. But it is interesting to think about who may have written the poem or at least who may have given the idea for the poem considering the following clues!! Tittiris don’t fly though they are birds; that is, they are incapable of being a typical bird!! Tittiri birds consumed what Yajnavalkya vomited and produced the verse!! What they produced is tagged as "Krishna" and what Yajnavalkya produced is tagged as "Shukla". Krishna means dark and Shukla means bright!! Yajnavalkya was the one who had animosity with his guru, so did he think this way?? Did the Tittiri disciples observe the animosity between their Guru & their teammate and prayed that they should not end up in such a situation?? Is there a different way to interpret Tittiri instead of non-flying birds? It is equally interesting to think about the Guru… what did he mean by return all the knowledge? How much of it was taught and how much was from Yajnavalkya? Why did the Guru decide to give the copyright to his other disciples or allowed it to be called as Tittiriya Upanishad? Why is Yajnavalkya a as popular name as Vaishampayana? Interesting clues and questions…

Friday, April 20, 2018

Behind the "Experiment"


Since there are many enquiries about the reason behind my "experiments with colors", and when will the "experiment" end, I thought I will post a blog. Let me start with the note that it is just not an experiment for experiment sake. That is, I did not start this experiment just to see how society reacts to someone wearing black, what is the impact of wearing only back on myself etc. though I was observing all these and interpreting the data! It is an unemotional decision for an emotional cause!! It is unemotional decision as it is grounded on the theory that visual reminders that are "seen" everyday have better impact on the action. Emotional Cause was so strong to push me into this and I still have not resolved it.

To give a context to those who don’t know me well, who have not been following my earlier articles: I decided to wear only black, forego my habit of applying maruthani, make my reasonably long hair to shoulder length. (Just "black only" became more visible and became more popular as an experiment, however. It is interesting to observe that even those commented on all three, did not/could not connect these three!!) It is exactly one year and two months since I started this - on 25th February 2017. The state of Tamilnadu was so pathetic at that time (it still is, unfortunately!). It became so obvious that there were no leaders to think about welfare of the state. It is not that we had leaders before and we lost them recently. It is just that, it came out in the open and stood as the most hurtful ugly truth. It felt as if I am living in a soak pit / septic tank! I can literally feel the smell on my body even now as I write this sentence. The pain was/is unbearable. On one end, I am what I am because of this country and on the other end, I felt completely let down by the country for all the genuineness I had!!

When I reflected back on what I could have done differently to contribute to a better state, it felt like a problem I do not own sometimes and felt like a problem I should have owned sometimes. It felt like a solvable issue sometimes and a unconquerable monster sometimes. Sure, I was a sincere citizen who voted in all elections, who voted for good candidates only after careful background check (they did not win in most cases though), who travelled 600 kilometres just to vote, who paid tax promptly, who did not pay any attention to the tax exemption clauses because I thought tax was to help build the nation and getting exempted felt incorrect. But I was also a person who had an opportunity to be part of administrative system and political system that we blame today but did not take the opportunity in the pursuit of my personal choices and preferences. How can I blame a system that I did not contribute to fix or create properly? The counterargument that ran in my mind was civilization functions at the very premise of exchange of services - that I contribute to the society in some way and enjoy the benefit of being in the society in some other way. Where did it go wrong in that case? 

The more and more I thought about it, it is just not politicians but it is the way the whole system is working today. It is just that I was in a protected environment I did not get exposed to the ugliness of what was happening… I was ignorant… and the ignorance was torn… the filters were broken… Sure I was seeing many gaps in the system earlier too but they were so mild compared to what I could see now… corruption in every possible aspect of life - starting from a bus conductor charging luggage fare to illiterate women but not charging literates for the same sized or even bigger sized bags, electricity board employees charging extra money per card as collection fees while government is paying them for playing the role and so on… It felt as if I am a stranger in my own country

Dwelling in the past too much is not a good idea especially when you know there is nothing much you can learn from it. So I thought instead of thinking about what went wrong, why it went wrong, I should focus on what I can make right even if it is only a small contribution. It would be like adding fresh water to our sewage ridden rivers… when we start, filth will be more than the fresh water and the river will be dirty; but seeing a few of us doing, more people will start adding more and more fresh water, at some point the filth will be less than the fresh water and our river will become usable again is my logic. I don’t know if I will live long enough to see that tipping point but I wanted to try.

The next dimension I considered is about my starting point: I did not/ do not think that becoming a politician is the solution because people in politics are only a representative sample of  the entire population, we need to clean the whole population with both bottom up and top down approaches. Since, I don’t have the circle of influence to start top-down, I will / can go bottom up.

I also realised that there are many things that hurt us badly but in the run mill of everyday life we forget the hurt and go with the flow. I did not want my pain and my urge to act on it to be forgotten. I needed a strong enough reminder that will make me never forget. As a person, I never like to be generalised or constrained. A constraint that is so obvious and make it easy for others to generalise will help me remember it, even if it is not every day, at least every week. I chose to wear only black, forgo maruthani and cut my hair short - this is how my "Operation Black" started and as described in my previous posts, it is a powerful tool - I am reminded constantly and continuously.

Last year, I did not know what to do and where to start but I knew I have to start somewhere. Now, I am working towards making a positive change to the morale and morality of younger minds. When I touch a few communities through these young minds and there is evidence that the communities turned around I will change to colours… Sure, there are stories of Asifas, Hasinis & Anitas and stories of Nirmalas to make dent in the confidence and hope but there are also Malu Sheikas, Rifath Sharooks, and Preethi Srinivasans who build it back. With a lot of ups & downs and mood swings, my Operation Black is going on.

Looking forward to all your support and contribution so that I can change to other colours… Your action or contribution need not be same as mine… the questions in front of us are

  • How can we make a mentally, ethically, physically, economically fit/sound society and how can we make a sustainable culture of integrity
  • How can we create a safe environment for humans and other lives and how do we leave a better planet for tomorrow

I see more and more people are stepping in to make it cleaner and answer the above questions in their own way. I am hoping to change to other colours before I leave the planet!!