Monday, March 2, 2015

கொக்கென்று நினைத்தாயோ?

பக்தியோகம், கர்மயோகம் இரண்டையும் ஒப்பிட்டு, என் மனோபாவத்துக்கு பக்தியோகம் சரிபாடாது என்று முடிவுக்குவந்த போதிலும் கர்மயோகம் கடினமானதாக இருக்கிறது. பஞ்ச காலத்தில் விரதம் இருப்பதாய் அலட்டிக்கொள்வதில் என்றுமே எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. சந்நியாசம் என்பது உறவறுத்துப் போவதிலில்லை! உறவுகளோடு இருந்தாலும் பற்றின்றி இருப்பதே சரி என்று முயன்றாலும் சறுக்கத்தான் செய்கிறது! அகந்தையின்றி, பற்றின்றி ஆனால் முழு அக்கறையுடன் கடமைகளை நிறைவேற்றுவதே சரியான வழியென்று ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்பே ஏற்றுக்கொண்டுவிட்ட போதிலும், அதைக் கடைபிடிப்பதில்தான் இன்றும் எத்தனை சறுக்கல்கள், எத்தனை குழப்பங்கள்! எது கடமை என்று உணர்வதிலேயே முதல் குழப்பம் ஆரம்பித்து விடுகிறது. குலத்தொழில் என்று இருந்திருந்தால் இந்த குழப்பம் இருக்காது என்று கொள்வதற்கில்லை. பெற்றோர் செய்த தொழிலை அதே அளவில் செய்வது மட்டும் போதும் என்பதில்லையே! புது உத்திகளை, புது கருவிகளைச் செய்து குலத்தொழிலை முன்னேற்றுவது தேவையா இல்லையா என்ற குழப்பம் அப்போதும் இருக்கத்தானே செய்திருக்கும்? ஆனால், விஸ்வாமித்திரர் கொண்ட கோபம் ஏற்படுத்திய திரிசங்கு சொர்க்கம் போலாகாமல், பகீரதன் கொணர்ந்த கங்கை போல முன்னேற்றம் அல்லது மாற்றம் ஏற்படுத்துவது எப்படி என்பது இப்போதைய கேள்வி!


பல யாகங்கள் செய்வதைவிடவும் தனது கடமைகளைச் சரியாகச் செய்தல் உயர்ந்தது. சரி. அதேசமயம் கொல்லவரும் பசுவையும் கொல்லும் சலனமின்மையையும் கைகொள்ளவேண்டியிருக்கிறது. எது கடமை என்று அறிந்து கொள்ளவே வாழ்வின் பாதி கழிந்தால், அதை, சரியாகச் செய்யக்கற்பதெப்போது? கர்வம் கழிப்பது எப்போது? கொக்காய் நினைத்து கர்மயோகியை எரிக்கத் துணியும் அகந்தையறுப்பது எப்படி? எப்போது? எதிரிலிருப்பது பசுவா, கொக்கா, வாசுகியா? உருவாக இருப்பது திரிசங்கு சொர்க்கமா, பொங்கி வழியும் கங்கையா? அப்படியே கங்கை வந்தாலும், அவள் வேகம் தாங்கி ஜடாமுடி விரித்துக் காக்கும் பேரன்பும் உரமும் வேண்டுமன்றோ?

Wednesday, January 28, 2015

Little drops of water….

This is the continuation of my earlier article "Color Color What Color?" I got varied response from my readers/friends. Key points were (for and against) about why did we fail, are/were we really better than the western world . While I accept that these are good questions, I do not want to speculate on how India would have fared if Brits did not rule us and Moguls did not invade us. Neither do I want to prove that Indian philosophy was/is better than western philosophy nor it is flawless. We definitely had dilutions of the concepts and several misconceptions. Though I have talked about the individualistic nature of three gunas, I want my readers to recognize the fact that we do have proverbs like "குலத்தளவே ஆகுமாம் குணம்" (The general disposition of a person reflects his caste/breed) and we are not all that pure as we wish to believe!!!

I do not agree fully with the "glory of India" mail (which made several rounds in the past and mentioned by a couple of you) that claims that India did not invade any other country!! Rajendra Chola invaded far east countries and established several Shiva temples. Cholas invading Pandiyas and Pandiyas killing Cheras etc. were there always. There are evidences of these wars and killings in literature, excavations, stone inscriptions etc. Let us not glorify ourselves too much!!!

So, what is my intention behind the article? What do I want? I want us to think about ways to make this country a better place to live. If countries that are covered with snow most part of the year or that do not see even one centimetre rainfall in a year could do better in providing safe shelter, food and better quality of life to the citizens, how can a country that enjoys sun all through the year, decent rainfall, and has 110 billion people (of supposedly intelligent race) not have any of these?

My question is not to some unknown "they"! It is to you and me!! What are you going to do as an individual? I am not interested in justifications and excuses. You do not even have to feel patriotic! (BTW, patriotism is not same as supporting Indian cricket team!!) This country has invested in you by giving you the food, water, shelter and education. What are you going to return? Indian government spends a lot on giving you safety - think of Army, Air force, Navy, Border Security Forces, Police and all the scientist community working in ISRO, DRDO and the like. Though per student spend may be less than that of other countries, there is considerable amount of money spent on your education by the government. It is just that we recognize only the fees we pay. How are you going to repay this debt? Just paying tax is not enough!

OK, you do not want to treat it as a business deal and you think, as son/daughter of this country, you are entitled to get these from the country. You may argue that water only goes from the lake to the paddy field and not vice versa. Even going with that argument, you are the lake for the next generation - your own sons and daughters!! What are you giving them? Hmm, ok, you do not have to think about next generation too! Don’t you want to live in a better place? Won't you clean the house you live in or you own (if you are not living in this country)? You may argue, one person's contribution alone will not change the large nation! சிறு துளி பெருவெள்ளம்!!! Little drops of water make the mighty ocean!!!

What is your action plan? With due respect to all the CSR activities where one spends a couple of days in a year at a school or a hospital or an orphanage, I am challenging you - is that sufficient? In the relay race of life, if you think that India was put in a disadvantageous position by all the invasions, don’t you also agree that we need to cover more distance in the same time to make it to the winning post?  And aren't we, the current generation Indians, the ones to run faster with the baton to make this country win?


We don’t have to be better than other countries - we just have to be a great country to be in. What are YOU going to do to make it happen?

Tuesday, January 27, 2015

Why Sukanya?

A young lady quit her career and went back to her home town. If she had quit the IT career because she did not enjoy it or she found a better profession that gives her more satisfaction or she just wanted to be with her family, I would have felt happy for her. But she left her responsibilities halfway, quit a potentially bright career just because of her gender! Not because of younger men! But because of an old man - a dirty old man!!

A few questions are haunting me since the day I heard of her resignation. 

1. Don’t men grow up? One of my colleagues, told me that men discuss about girls during their informal chats at the smoking zone etc.! I was stunned to hear that because this person was married and a proud father of two boys. Of course, people do get attracted to the other gender - every species is designed that way to sustain the population. However, what I am surprised with is, how can you keep thinking about gender attraction even after you cross that age. When an adult behaves like a child he or she is considered as mentally challenged or retarded. But if an adult stops growing beyond teens, why are they not called as retarded? Why do men feel proud to be retarded?

2. What is the society going to do? When would we stop penalizing the Akalyas for the mistake of Indran? Are we expecting a super hero like Rama to come and release Akalyas from stonehood? Isn't there a different explanation for the story? If all men are like Rama and be with one Sita, women can cherish being women without fear, they do not have to be stones is a better explanation I feel. What are the fathers teaching their sons? None of the pancha kanyas fought for themselves. Consider Sita - as a little girl, she could lift the shiva dhanush with ease which many kings failed even to move. But she waited for Rama to help her. If her mother in law went to war and helped winning the war, why could she not fight for herself? Kaikeyi is despised for her ability to fight the war and her ability to negotiate the deal she wanted but Sita is worshiped.  Is this why women wait for someone else to act on their behalf? Why are we not teaching our girls about Mahishasura mardini more than Akalyas and Sitas?

3. Don’t women have guts? If young fawns, the poorest of poor creatures, can jump high to give an impression to their predators that they are not an easy prey and put them off, why did you not try to scare the old man? Is it social conditioning? Even an ant bites back when you try killing it. Are you weaker than an ant my dear good girl? Don't you remember, we belong to a civilization where a woman chased away a tiger without any powerful weapons! Couldn't you scare this ass away?

4. Has India got freedom? Is it 1947 already? Isn't this incident a shame on us? Do we care? Oh yeah, we have bigger shames to handle! Why would we bother about an young girl resigning and being "safe" at home!!!

Sunday, December 28, 2014

Brainwashing attempts!!

I got a propaganda text today through whatsapp! It claimed that men who are not disturbed by wives (Kalam, Vajapayee and the like) have proved to be great leaders and lead the nation in spite of where they started their career whereas their women counterparts proved that they can disturb the nation because they do not have husbands. Interestingly, this text was shared by a strong woman who I respect! I was wonderstruck!

Why could she not immediately think of Mother Teresa and the like who could heal millions of people? What is stopping her from thinking of women who have lead the nations, corporates and successful families in spite of men?

I am thinking of all such brainwashing efforts made in the past! Starting from Seetha being sent to the jungle just because someone commented on Rama's judiciary system, there are several examples till recent movies and the whatsapp message! In 1970s, there were movies made to show that a woman who is not educated is a much better person than an educated woman; A decade after that, there were movies to show that working women are arrogant, they can't run a family well. The next decade saw movies that women can't run business; if they run, they are either stupid & arrogant or vulnerable to the villan's plots that a hero was needed to rescue them!!

Incidentally, I was watching a movie that said a good wife would serve the husband alcohol at home and she would search for his ex-girl friend and let him be with her for a day (may be more) in spite of the fact that their married life is very beautiful and it is very painful for her to let him be with another woman. Wow, the modern day representation of Nalayini!! Why there is no such attempts from a man to keep his wife happy? Does this mean that only men had a broken love? For every man who had to forego his love to get married to another woman, there is a woman who has lost her love, right? What happens to them? They can't choose to be with their ex-boyfriend, though the husband is willing to let her go  because the boyfriend wants her to come without the thali & the husband has a daughter to be taken care! Wow!!


Current century film makers have learnt not to comment on capability of women; it does not matter anyway!! All the heroines are beauty queens who would be liked by all men for their looks and ads portraying women as very weak willed who would drop everything and follow men just by the bikes they ride in or the deodorants they use! Sure, men are not going to stop their attempts to brainwash subtly. What are women going to do about this?

Monday, October 6, 2014

பேராண்மை!

எழுபது வயதிருக்கும் அந்தப் பெண்மணிக்கு. சற்றே கூனிட்ட முதுகு. வறுமை முகத்தில் வரைந்த வரிகளும் வயது வழங்கிய நரையும் எழுபது வயதைத் தொண்ணூறாய்க் காட்டின. வேலை வேண்டும் என அவர் என்னிடம் வந்த நாளை என்னால் மறக்க இயலாது! ஆயிரம் ரூபாய் சம்பளம் வந்தால் போதுமென்றும் அதற்கு என்ன வேலையும் செய்வதாக அவர் கூறிய நிமிடத்தில் என்னுள் இருந்த உணர்வுகளை எப்படி விவரிப்பது! உடல் கூனிய போதும் உள்ளம் கூனாத கம்பீரம். தன்மானத்துடன் வாழ நினைக்கும் அவரது துணிவையும் நம்பிக்கையையும் வியந்த அதே நேரத்தில் இந்த வயதிலும் கடும் உடலுழைப்பு இருந்தால் மட்டுமே ஒருவேளை பசியாறும் நிலையில் நம் முதியவர்களை வைத்திருக்கும் வலி உயிர் குடைந்தது! அவரை விட வயது குறைந்த என் தாயார் பணி ஒய்வு பெற்று எட்டு வருடமாயிற்று!

ஒரு வேலையும் வாங்காமல், மாதம் ஆயிரம் ரூபாய்களை அவருக்குக் கொடுப்பது எனக்கு கடினமானதல்ல. ஆனால் அவர் அதற்கு ஒத்துக்கொள்வதாயில்லை! அவரது கம்பீரத்தைக் களையும் அவப்பணி எனக்குப் பிடிக்கவில்லை. அதனால், நாற்காலிகளையும், கதவுகளையும், வாரத்தில் சில நாட்கள் ஈரத்துணியால் துடைக்கும் வேலைக்கு மாதம் ஆயிரம் என்று முடிவாயிற்று!  ஒரு மாதம் எளிதாய்க் கடந்தது. இரண்டாம் மாதம் வேலைக்கு வருவதில் சில சிரமங்கள் அவருக்கு - முதுமை அளித்த கொடை! இரண்டு வாரத்திற்குப் பின் வந்த அவர், இனி வேலைக்கு வர இயலாதென்றும் இப்படி விடுப்பு எடுத்தபின்னும் சம்பளம் வாங்குவது சரியில்லை என்று தான் கருதுவதாகவும் கூறி விடை பெற்றார். அந்த மாதச் சம்பளமாக ஒரு ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுப்பது பெரும்பாடாய்ப் போயிற்று!!

அடுத்த ஒரு மாதத்தில், அவர் வலி தாங்க முடியாமலோ, அவர் போன்றவர்களை வறுமையில் வைத்திருக்கும் அவமானம் பொறுக்க இயலாமலோ, இயமன் ஒரு பேருந்து வடிவில் அவர் உயிர்பறித்தான்!! கொள்ளி வைக்கப் பிள்ளையில்லை! ஒரு வேளை பணம் இருந்திருந்தால் உறவுப் பிள்ளைகள் ஈமக்கடன் செய்திருக்கக்கூடும்! கூர்காவாக எங்கள் தெருக்களை காவல் காக்கும் அவரது கணவரும் தோழி ஒருவரும் மட்டும் நின்று ஒருவாறாக இறுதி மரியாதை செய்துமுடித்தனர்!!  வேறு யாரும் பெயருக்காகக்கூட, அருகிலில்லை! ஏனென்ற கேள்வியும், இனம்புரியாத வலியும் மனதில்!

ஒரு மரணம் ஒருவரை இப்படிப் புரட்டிப்போடுமா? தாடியுடன் எவரும் பார்த்திராத கூர்க்கா முகத்தில் காடாய் தாடி; நமஸ்தேஜி என்று புன்னகைக்கும் அந்த முகம் நிமிர்ந்து கூட யாரையும் பார்ப்பதில்லை! உணவு உண்பதில்லை!  இறுதிச்சடங்கு செய்த பெண், வருத்தத்தோடு கூறினார், "இப்போதெல்லாம் யாரும் கட்டிய மனைவிக்காகக் கூட இப்படி வருந்துவதில்லை! திருமணம் செய்து கொள்ளாவிடினும், தத்தமது திருமண பந்தத்திலிருந்து ஏதோ காரணத்தால் விலகி, இவர்கள் இருவரும் கிட்டத்தட்டமுப்பது வருடங்களாக ஒன்றாக வாழ்ந்தனர். இப்போது இப்படி ஆகிவிட்டது. கூர்க்கா இன்னும் எத்தனை நாள் உயிருடனிருப்பார் என்று தெரியவில்லை ". அதன் பின்னர் அவர் கூறிய எதுவும் என் செவியில் விழவில்லை! 

பிறன்மனை நோக்காப் பேராண்மை!! எத்தனை எளிதாய்ச் சாடிவிட்டுப்போகிறோம்! மனைவியைத் தினமும் தீக்குளிக்க வைக்கும் ஏக பத்தினி விரத ராமன்கள் எத்தனை பேர்! உணவில் உப்பில்லை என்ற உப்புப் பெறாத விஷயத்திலிருந்து எல்லாவற்றிலும் குறைமட்டுமே காணக் காத்திருக்கும் நக்கீரர்கள் எத்தனை பேர்! தன்னை விட அதிகம் தெரியக்கூடாதென்று, மனைவியின் தன்னம்பிக்கையை பல்வேறு உத்திகள் மூலம் குலைத்துப்போட்டு, கட்டை விரல் கேட்கும்   துரோணர்கள் எத்தனை பேர்! இந்திரன் பிழைக்கு மனைவியை கல்லாக வாழச்சொல்லும் கௌதமர்கள் எத்தனை பேர்! தான் மனதுக்குள் இந்திரானாய் இருந்தாலும், கண்ணகியாகக் கால் சிலம்புவரை கழற்றித் தரவேண்டும் என  நினைப்போர் எத்தனை பேர்! இவை யாவும் பேராண்மையின் இலக்கணங்களா என்ன? பிறன்மனை நோக்குதல் எத்தனை இழிவோ அத்தனை இழிவுதானே இவையும்!! இன்னும் சொல்லப்போனால், பிறன்மனை நோக்குவதற்கு இன்னொருவர் துணை தேவை - நோக்கும் பெண்ணின்/ஆணின் துணை தேவை! ஆனால் பிற குற்றங்களுக்கு இன்னொருவர் துணை தேவையில்லை! ஆனால் அந்த குற்றங்கள் எத்தனை எளிதாக மறக்கப்பட்டுவிடுகின்றன! அலட்சியப்படுத்தப்படுகின்றன! கூடா நட்பு கேடாய் முடியும் என்பதும் ஆறாதே நாவினால் சுட்டவடு என்பதும் நிகரன்றோ!

புலனடக்கம் என்பது எல்லா புலன்களுக்கும்தானே! தனது பேச்சைக்கட்டுபடுத்த இயலாதவர்கள், தன உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள இயலாதவர்கள், பிறரைக் குறைவாய்க்  கருதலாமோ? பொதுவாகவே தன் குற்றம் நீக்கி பிறர்குற்றம் காணும் பண்பு நம்மிடம் குறைந்துகொண்டே இருக்கிறது! வள்ளுவர்கூட, அன்புடைமை, இனியவை கூறல், நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை அதிகாரங்களுக்குப் பின்னால்தான் பிறன்மனை விழையாமையை வைத்திருக்கிறார்! அரசியலில் ஆறாவது அதிகாரமாகக் குற்றம் கடிதலை வைத்ததன் மூலம் குற்றம் கடிதலின் சிறப்பை வலியுறுத்திய  வள்ளுவர் "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை" என்ற கருத்தை அதே அதிகாரத்தில் முன்வைக்கிறார்! உலகப்பொதுமறையை உலகுக்கு அளித்த தமிழ்கூறும் நல்லுலகம் கற்றபின் அதற்குத்தக நிற்காததென்ன?